Monday, February 27, 2012

கழுவ மரம்

கடந்த வெள்ளிகிழமை ஈரோடு சென்றிதோம் நண்பரின் அண்ணன் கல்யாணத்திற்காக.அங்கிருந்து வளயகரா தெருவில் உள்ள அய்யனார் கோவிலுக்கு சென்றோம்.கடந்த இரண்டு மதமாக செல்லவேண்டும் என்று எண்ணியது அன்று நடந்தது. என்னுடன் தரணி , தியான் உடன் வந்தனர்.ஒரு மரத்தை காண்பதற்கு நாங்கள் நடந்து சென்றது இன்னும் வியப்பாகவுள்ளது.கழுவ மரம் பழகாலத்தில் தண்டனை அளிக்க பயன்படித்தியது. தற்பொழுது அது ஈரோடில் மட்டும் உள்ளது.


தற்பொழுது அதை கடவுளாக வழிபடுகிறார்கள். இது 800 ஆண்டு பழமையானது. இதன் நடுபகுதி உடைந்துவிட தற்பொழுது அது மாட்றபட்டுள்ளது. இது எந்த மரத்தில் செதுக்கப்பட்டது என்று தெரியவில்லை.பொதுவாக அனைவராலும் பனை மரம் என்று கருதபடுகிறது. இதன் சங்கிலியும் தற்பொழுது மாற்றபட்டுள்ளது. இதற்க்கு எண்ணெய் தடவும்பொழுது சிறிது சாய்வாக தடவினால் காயம் ஏற்படுமென்று கோவிலின் அற்ச்சகர் கூறினார். ச.ராமகிருஷ்ணன் மூலம் தான் இதனை அறிந்துகொண்டோம்.


Tuesday, February 21, 2012

சுவர்

நாலு சுவர்களும் நாலு நண்பர்கள் என்பது இப்பொழுதுதான் புரிகிறது. சுவர்கள் எப்பொழுதும் விசித்திரமானவை.நம்மோடு நாம் பேசமுயலும் போது பெரும்பாலும் நாம் சுவற்றின் துணையாகிகொல்கிறோம்.கேள்வி கேட்பவனாக இருக்கும்போது அது பதில் அளிப்பவனாகவும் பதில் கூரும்போது கேள்வி கேட்பவனாகவும் நம்முடன் அது பேசுகிறது.

நண்பர்களை தாண்டிய பல விஷயங்கள் சுவருடன் பறிமாறபடுகிறது.நாம் பெரும்பாலும் ஒரு தடவையாவது சுவற்றுடன் பேசிகிறோம்.அவைகள் எப்பொழுதும் நம்பிக்கைக்குரிய ஒரு தோழன். நம்முடைய காதல் கவிதைகள் பெரும்பாலும் இவைகள்தான் அறிந்துள்ளன. இவைகள் உரையாடும் பொழுது நம்மை நமேக்கே பிரதிபலிகின்றன. ஆண்களின் கண்ணீரை பெருவாரியான சுவர்கள் தன்னுள் இழத்துகொள்கின்றன. இவைகள் எப்பொழுதும் தாம் அறிந்தவற்றை பிறருக்கு கூர்வதில்லை.சுவர்கள் மனிதனின் அணைத்து முகங்களையும் அறிதுள்ளன.ஆண் பெண் இவ்விருஇனத்தின் மிகபெரும் தோழன் நம்மை நோக்கி எழுப்பட்ட பல கேள்விக்கான பதில்கள் அதனுள்தான் புதையுண்டு உள்ளன.


கல்யாண கண்ணன்