Wednesday, May 2, 2012

காதலின் வெறுமை

ஒரு பெண்ணை காதலிப்பது என்பது ஒரு இனம் புரியாத உணர்ச்சி. அனைவரும் இந்த உணர்ச்சியைஎதேனும் ஒரு வயதில் உணர்கின்றனர். ஏன் இந்த பெண்ணை காதலிக்கிறோம் என்று அறியும் முன்பாக மனதில்பதிந்து விடுகின்றனர். அதன் பின்பு அவன் என்னவாக அகிறான் என்று அவனுக்கு தெரிவதில்லை. உடன் உள்ளவர்களுக்கும் புரிவதில்லை.அனைவரும் காதலின் உணர்ச்சியைஅறிந்துள்ளனர். அனால் காதல் ஏற்றுகொள்ளும்போது ஏற்படும் உணர்ச்சியைபெறகாலம் இடம் அளிப்பதில்லை.

ஒருவனின் 21 வருட வாழ்கை அனுபவத்தை எப்படி ஒரு பெண் மாற்றிவிடுகிறாள். அவனின் ஆளுமைகள் அனைவரையும் பின்னுக்கு தள்ளிவிடுகிறாள். காதல் மறுக்கப்படும் பொழுது தன் வாழ்விற்கான வெறுமையை இனம் கண்டுகொல்கிறான். அதன் அர்த்தம் காதலிகளால் மிகவும் சிறப்பாக கற்ப்பிக்கபடுகிறது. அவன் தான் அடையும் வெறுமையை நிரப்ப தன்னை பிற சம்பவங்களில் ஈடுபடுத்திகொல்கிறான். ஆனால் எதுவும் அந்த வெறுமையை நிரப்புவதில்லை. ஏதேனும் ஒரு சிறு வார்த்தை கூட அந்த வெறுமையை திரும்ப செய்கின்றன. அந்த வெறுமை அவனை விட்டுசெல்வதில்லை.

அது அவனுடன் நிழல் போல பயணபட்டுகொன்டு இருகின்றது. சில நேரங்களில் அது அவனைவிட பெரிதாகி நின்று கொண்டு பயமுறுத்துகிறது. சில சமயம் காலின் அடியில் நின்று சிரிக்கின்றது அப்படியும் இல்லையெனில் அவனில் இருந்துகொண்டு அவனை அறிகின்றது. தன் வாழ்வில் காணும் அனைத்தாகவும் அவளை உருவகப்படுத்துகிறான். நினைவுகள் அவனை ஆட்கொள்ளும் போது எதனுள்ளாவது தன்னை புதைத்து கொல்கிறான். அதனில் இருந்து அவன் வெளிப்பட முயற்ச்சிப்பதில்லை.அது அவனுக்கு எதோ ஒரு மகிழ்ச்சியை தருகிறது போலும். மரத்தில் இருந்து பிரியும் இலை மரத்தை சுற்றி கிடப்பதை போல அவனும் அவன் மனமும் அந்த வெறுமையை விட்டு அகல்வதில்லை.அந்த வெறுமைதான் அவனை செயல்படவைக்கிறது. 

கல்யாணகண்ணன்.ப