Friday, March 16, 2012

மாணவர்கள்

இன்று 14/03/2012 இறவு 8.00 மணி அளவில் கோயம்புத்தூர் தொழில்நுட்ப்ப கல்லூரியல் மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுகொண்டனர். மூன்றாம் ஆண்டு மாணவர்களும் நாண்காம் ஆண்டு மாணவர்களும் சண்டையிட்டுகொண்டனர்.தவறு யார் மீது என்பது இதில் பிரச்சனை இல்லை. இரு ஆண்டு மாணவர்களும் நடந்துகொண்ட விதம் மிகவும் வருத்தம்தரகூடியது. உடல் குறைபாடு கொண்ட ஒரு மாணவனை நான்காம் ஆண்டு மாணவர்கள் குறைந்தது 30 மாணவர்கள் தாக்கினார்கள்.குச்சியின் உதவியுடன் நிற்க்ககூடிய ஒரு மாணவனை தொடர்ந்து அடித்தவாறு இருந்தனர். தடுத்த ஒரு சில மூன்றாம் ஆண்டு மாணவர்களையும் நான்காம் ஆண்டு மாணவர்கள் வசைபாடினார்கள். ஆடுகளம் அனைத்து இடங்களிலும் சண்டை இட்டுகொண்டிருந்தனர் . விடுதி காப்பாளர் இதை சற்றும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. அதன் வழி சென்ற விடுதி துணை காப்பாளர் அதை கவனத்தில் முற்படவில்லை.சென்னை சட்ட கல்லுரி வளாகத்தில் நடந்ததை நேரில் பார்த்ததை போன்று இருந்தது. பொதுமக்கள் வந்து தடுக்கமுற்பட்டனர்.தகவல் கல்லுரி முதல்வருக்கு அறிவிக்கபட்டது.முதல்வரின் வருகைக்கு முன்பாக அனைத்து மாணவர்களும் பிரிந்துசென்றனர். அடிபட்ட மாணவனும் தான் கபடி விளையாடும்போது அடிபட்டதாக சொல்கிறரன். இதில் ஒரு சில விஷயங்கள் மாறுபடுகிறது. மாணவர்களுக்கு பொது இடத்தில சண்டை போட யார் சொல்லிதந்தது. ஒரு வேகத்தில் ஒருவர் அல்லது இருவர் சுயத்தை இழக்க நேர்ரிடும் ஆனால் இங்கு அனைவரும் தங்கள் சுயத்தை இழந்தது எப்படி. யார் மீது இந்த தவறை கூருவது.குடும்பத்தின் மீதா அல்லது கல்வி நிறுவனத்தின் மீதா அல்லது சக நண்பர்கள் மீதா அல்லது சமுகத்தின் மீதா அல்லது சினிமாவின் மீதா . ஒரு விதத்தில் அனைவரும் இதற்கு காரணம். அடித்தவர்களை விட அதை பார்த்தவர்கள் தான் மிகவும் ஆபத்தானவர்கள். இவர்களை குறை சொல்லமுடியாது இவர்களுக்கு சொல்லிக்குடுத்த அனைத்தும் பிறர் வேறு நீ வேறு. என்றும் பிறர் பிரச்சனை மீது ஆர்வம் காட்டதே.அதன் விளைவு தான் பொது இடத்தில் இவ்வாறு நடைபெறுகிறது.ஒன் ஒருத்தனால் என்ன பன்ன முடியும் என்ற கேள்வி வேறு. என்னக்கு ஒன்று மட்டும் புரியவில்லை ஏன் இந்த கேள்வி.அவனால் பொது இடத்தில் ஒருவனை அடிக்க முடியும் என்றால் நம்மால் ஏன் பொது இடத்தில் அதை தடுக்க முடியாது.தவறு புரியும் அவனுக்க அவ்வளவு தைரியம் என்றால் நமக்கு ஏன் பயம். அவன் கையில் ஆயுதம் இல்லை அப்பறம் கூட நமக்கு பயம். "அச்சம் தவிர்" ,"ரௌத்திரம் பழகு" இது அனைத்தும் படிப்பதற்கு மட்டும் இல்லை.மனவர்களுக்கு ஏன் இந்த கோபம். எப்படி இவர்களிடம் அதை அழிப்பது. இப்படி பல கேள்விகள். விடை தெரிந்தால் கூறுங்கள்.