Saturday, September 27, 2014

நான் பேச நினைப்பதெலாம்



நான் பேச நினைப்பதெலாம்
நாள்:18/02/2014
இடம்:சென்னை

பேராற்றலும் பேரன்பும் கொண்ட இறைவனின் அருளலால்

என்னட இவன் இந்த காலத்திலும் கடிதம் எழுதுறானே என்று நீ என்னலாம். கடிதம் மூலமாவது என் என்னங்கள் அனைத்தையும் கூறி விட முடியாதா  என்றுதான்.
உனக்கான என் கடைசி வார்த்தைகள் சமயல்பாத்திரத்தில் ஒட்டிய எண்ணைய்போல என் மனதில் பிசுபிசுத்து கொண்டிருக்கிறது. ஒவ்வொருமுறையும் உன்னிடம் பேசும்பொழுதும் உனக்கான என் வார்த்தைகள் எனக்குள்ளேயே சிதறிவிடுகின்றன. ஒளிசிதறல் போல. உன் மதத்தில் ஆண் பிறமத பெண்ணை காதலித்தால் பிரச்சனையில்லையாம். கணவனின் மதம் தானே பெண்ணிற்கு அதுதானாம். அதுவே பெண் என்றால் அப்படியில்லையாம். எண்ணிக்கை அதிகம் உள்ள என் மதத்தில் நான் ஒருவன் பெரும் பிரச்சனையில்லை. கடல் அலையின்போது கடலினுள் செல்லும் மணலை யார்தான் கவனித்தார்கள்.

“என்னை கல்யாணம் பன்னபோரவருகூட இப்படி நினைப்பாரானு தெரியல “

என்று நீ கூறியது என் காதுகளில் கேட்டுகொண்டேயிறுக்கிறது. நீ எனக்கு ஓர் கருப்பு வெள்ளை புகைப்படம் போல என்பதை எப்படி சொல்லி புரியவைப்பது. நான் உன்னிடம் பேசியவார்தைகள் குறைவு. நீ என்னிடம் மிகக்குறைவு. எனக்கு உன்னை பிடிக்கவில்லை. நீ என்னிடம் அதிகம் பேசிய வார்த்தை. அவைகளை நான் என்றும் கேட்க முற்பட்டதில்லை. நம் மனம் நமக்கு வேண்டிய பதிலைத்தான் பிறரிடம் இருந்தும் எதிர்பார்கிறது. உனக்கும் எனக்குமான பாதை நீண்டது. மிகவும். அது உன் கண்ணுக்கு புலப்படவில்லை. அதில் உன் தவறென்று ஏதும்மில்லை.

“நீ காட்டும் அன்பு புரியாத இடத்தில் நீ ஏன் அன்புகாட்டுகிறாய்”

என்று நீ கேட்டாய். புரியவில்லை.

ஒரு அறிவியல் அறிஞன் தன் காதலியுடனேயே தான் பயனிப்பதாக அவள் இறந்தபின்பும் கருதினானாம். அவளுக்கு பிடித்த ஆடையை பார்த்தபொழுதுதான் அவள் தன்னுடன்யில்லை என்று கதறி அழுதானாம் அதே இடத்தில். ஒருவேளை உனக்கான கண்ணீர் என் கண்ணங்களை நனைக்கும் பொழுதுதான் புரியலாம். நீ என்னை விரும்பவில்லையென்று. இப்பொழுதும் கூறுகிறேன் இதில் உன் தவறென்று ஏதும்மில்லை.

என்னை ஏன் காதலிக்கிறாய்?

தெரியலையே....

விளங்கும்...எதாவது காரணம் இருக்குனு நினெச்சேன் ஆனா அதும்மில்லையா....

உண்மைதான் . எனக்கு இன்னும் தெரியல என்ன காரணம்னு. உன்னிடம் இருந்துதான் வார்த்தைகளின் ஆழம் புரிய ஆரம்பித்தது. உன் வார்த்தைகளின் ஆழத்தில் நான் மயங்கி கிடக்கிறேன். இவைகள் அனைத்தும் அதித கற்பனையாக உனக்கு தெரியலாம். அல்லது காமத்தின் விளைவு என்றுகூட தோன்றலாம். காமம் இல்லாத காதல் உப்பிலாத உணவு போலென்பது அனைவரும் அறிந்தது.

“ இனி போன் பன்னமாட்டேனு சொல்லு

பன்னமாட்டே

சத்தியமா? சத்தியமா....

நீயும் எத்தனவாட்டிதா சத்தியம் பன்னுவ “

எனக்கும் புரியதான் செய்கிறது. விருப்பம்மில்லாத பொண்ணுக்கு போன்பன்றது தவறென்று. என்ன செய்ய நான் உன்னை விரும்புகிறேன் இதை எப்பொழுதும் முழுமையாக நான் உன்னிடம் கூறியதில்லை. இப்பொழுதும் தான். ஒன்றுமட்டும் உண்மை இதில் உன் தவறென்று ஏதும்மில்லை.

“ அறிவில்லையா ..... எத்தனதடவ சொல்றது எனக்கு நிச்சியம் ஆகபோகுது.
எனக்கு உன்னபிடிக்கல புரியுதா....இததான் நானும் மூனுவருசமா சொல்றேன்
புரியுதா... இனிமே போன் பன்ன மரியாத கெட்டுறும். “

நானும் புரியாமல் தான் தெரிந்தேன். நண்பர்கள் உனக்கு நடக்கபோகும் நிச்சயதார்த்த
ஏற்பாடுகளை பற்றி கூறும்வரை.மன்னித்துவிடு....மன்னித்துவிடு.....மன்னித்துவிடு......
எப்பொழுதும் உன் நினைவுகள் வெயில் போல என்னில் எங்கும் பரவிக்கிடக்கிறது.

இப்படிக்கு

முகமது
(உனக்கான என்னுடைய பெயர்)

(உன் முகவரியும், ஐந்துதெரு தள்ளி இருக்கிற உன் வீடும் தெரிந்த எனக்கு இதை தபாலில் அனுப்பவும் விருப்பம்மில்லை. நேரில் தரவும் தோன்றவில்லை).


ப.கல்யாண கண்ணன்

Friday, September 12, 2014

தற்கொலை

  ரயிலின் முன்பு விழுந்தது தற்கொலை. இந்த தலைப்பே இவனுக்கு போதுமானதாக இருந்தது. இறந்தது ஆணா? பெண்ணா? என்று படிப்பதற்குள் அவனது தற்கொலை சிந்தனை பேருந்தில் பயணம் செய்பவன் விழிப்பது போல சட்டென்று விழித்தது. கடந்த சில நாட்களாகத்தான் தற்கொலை பற்றி ஆழசிந்திக்கிறான். ஓவியத்தை புரிந்தது கொள்ள முயற்சிப்பது போல்.

 இதற்கு முன்பு அவனுக்கு மூன்று முறை தற்கொலை பற்றி தோன்றியது. ஆனால் அவைகள் வாயில் இருந்து வரும் பெரும்பாலான வார்த்தைகளை போல ஒன்று. இன்றுதான் புரிந்தது தற்கொலைக்கு பெரிய காரணங்கள் ஒன்றும் தேவையில்லை சின்ன சின்ன காரணங்களும் நீண்டநேர சிந்தனையும் போதுமென்று. எல்லோருடனும் இருக்கும்பொழுதும் அவன் உணர்ந்த தனிமை தான் தற்கொலை பற்றிய சிந்தனையை உசுப்பியது.
அவனுக்குள் தனிமை மாடு அசைபோடுவது போல அவனது சின்ன சின்ன நிராகரிப்புகளையும் திரும்பெடுத்து அசைபோட்டது. சில நேரங்களில் அவனுக்கு தோன்றும் கடல் அலையில் அடித்துசெல்லபடும் மணல்போலத்தான் இருக்கிறோமோ? என்று. யாருக்கும் தெரிவதில்லை சற்று முன்பு இருந்த மணல் இல்லை இதுயென்று. ஒரு வேலை நமது தற்கொல்லை மதியநேர வெயில் கடல் அலையின் ஈரத்தை உறிஞ்சுவது போல கனநேரத்தில் மறகப்படுமோ? எதுவாயின் என்ன கடல் மணலில் ஈரம் பதிந்துகொண்டுதான் இருக்கும்.

தற்கொலைக்கான காரணம்?

இதுவரை எதுவும்மில்லை.

தற்கொலைக்கான  பொதுவான காரணங்கள் எதுவம் தன்னிடம்மில்லை என்பது தெரியும். தற்கொலைக்கு பின்பு பெரிய காரணங்கள் எதுவாது சொல்லபடலாம். ஆனால் என்னுடைய காரணம் ஊர் நூலகத்தில் மேல் வரிசையில் அடுக்கப்பட்ட நூல்கள் போலதான்.
எப்படி தற்கொலை செய்துகொள்வது?
இதுவே தற்கொலைக்கான ஒரு காரணம் போல்தோன்றியது. தெரிந்த தன் நண்பர்கள் ஒவ்வொருவரிடமும் மேலோட்டமாக தற்கொலை பற்றி பேச்சின் இடையிடையே கேட்டான். 

ஒவ்வொருவரின் பதிலிலும் தற்கொலைவாடை வீசியது. 

அதில் ஒருவன் தன் தற்கொலை முயற்சியை முதல்முறையாக விளக்கினான். அவனை பற்றிய தனிமைநேர சிந்தனைகள்தான் அவனை தற்கொலைக்கு தூண்டியதாகவும் ஆனால் அது காதல் தோல்வியின் பொருட்டான முடிவு என கல்லுரி நண்பர்கள் எண்ணியதாகவும் அதை தானும் ஆமோதித்ததையும் நகைச்சுவையாக கூறினான்.

இதை யாரிடமும் சொல்லாதே என்ன

சொல்லமாட்டேன்.

அந்த நேர உணர்வுகளை கேட்கவேண்டும் என்று தோன்றியது. ஆனால் அதற்குள் தான் அவசரப்பட்டு சொல்லிவிட்டோமோ? என்று யோசித்தவாறு சென்றுவிட்டான். அவனுடைய தன்னை பற்றிய சிந்தனை எதுசார்ந்ததாக இருந்திருக்கும். ஒருவேளை அவன் சென்ற பாதையில் தான் நானும் சென்று கொண்டிருக்கிறோனோ? தனிமை என்ற வார்த்தையின் அடர்த்தி அவனுள் பரவியது. தன்னுடைய தனிமையென்பது வெளிச்சத்தில் ஒலிந்திருக்கும் இருளை போன்றது என்று அடிக்கடி தனக்குள்ளே சொல்லிகொள்வான்.
அதற்குள் இரண்டு நாட்கள் கடந்துவிட்டது.
இன்னும் சரியான காரணம் ஒன்றும் அகப்படவில்லை.

முடிவுசெய்தாகிவிட்டது சரியாக நான்குமணிக்கு.

பழமைகளில் அவனுக்கு உள்ள ஈர்ப்பு அவன் தேர்தெடுத்த முறையில் தெரிந்தது. இரண்டு மணிக்குதான் தோன்றியது தற்கொலைக்கு பின்பு தன் முகம் எப்படியிருக்கும்மென. தான் தேர்ந்தெடுத்த முறையில் முகம் அஷ்டகோணலாகும் எனவே முடிந்தளவு மாற்றவேண்டும் என்பதை மட்டும் மனதில் வைத்துகொண்டான். தூக்கு போடும் பொழுது விந்தணுக்கள் வெளியேறும் என்று கணேஷ் சொன்னது நினைவிற்கு வந்தது. இதுகாரம் வரையில் அது தன் இலக்கை அடையவில்லை என்பதையும் சாவிற்கு பிறகு ஒரு பெண்ணின் கண்ணிலாவது பட்டுவிடுமா? என்று எண்ணிகொண்டான்.

மணி சரியாக மூன்று ஐம்பத்தைந்து, அவன் சற்றும் எதிர்பாராதவிதமாக அடுத்தநாளின் நொடிகளை இன்று எட்டிபிடிக்க நினைக்கும் ஜனதிரல்களுக்கிடையில் கிண்டி பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறை அருகே அழுதுகொண்டிருந்த முப்பத்தைந்து வயது பெண்ணின் உருவம் வந்து சென்றது. தற்கொலைக்கு பின்பு அனைவரும் தேடியடைய நினைக்கும் ஒரே விஷயம் கடிதம் ஆனால் இதுவரை கடிதம் எழுதிபழக்கம் இல்லை.
SMS அனுப்பிதான் பழக்கம் எனவே அதன் வடிவில் ஒரு குறுஞ்செய்தி மட்டும் எழுதிவைத்தான்.
இது தற்கொலையில்லை கொலை

அந்த வார்த்தைகளில் எந்த விதமான நடுக்கமும்,அழுத்தமும் காணவில்லை.

ப.கல்யாண கண்ணன்