Tuesday, January 21, 2014

வண்ணத்துபூச்சி

என் கையில் அமர்ந்த வண்ணத்துபூச்சி

பறந்துபோகிறது -இப்பொழுது

அதன் வண்ணங்கள் மட்டும் கையில்  உள்ளது

இதுவும் கொஞ்ச நேரத்தில் அழியலாம் - ஆனால்

அப்பொழுது நான் கண்ட அந்த

அதை எப்பொழுது அடைவேன் இனி

அதன் உடலில் நான் கயிறு கட்டமாட்டேன்

என்று எப்படி சொல்வேன்

அதனுடன் நானும் பறப்பேன்

என்று எப்படி சொல்வேன்

யாருக்கு தெரியும் வண்ணத்துபூச்சியின் மொழி.


ப.கல்யாண கண்ணன் 

No comments:

Post a Comment