இந்நாளில் யாரேனும் உங்களது
அன்பின் குறுவாளை என்னுல்
செலுத்துங்கள்
எனக்கான மரணம் இந்நாளில் தான்
நிகழவேண்டும் என யாரேனும் உங்கள்
தெய்வத்திடம் முறையிடுங்கள்
இந்நாளின் அதிகாலை மழைத்துளி
என் உறைந்து போன உடலின்
மேல்தான் விழவேண்டும்
இதனை எனக்காக யாராவது செய்யுங்கள்
உங்கள் கனவில் வருவதை நான்
நிறுத்திகொள்கிறேன்.
ப.கல்யாணகண்ணன்
23/10/2014
No comments:
Post a Comment